மூழ்கும் அசாம்: இன்றா நாளையா?
மூழ்கும் அசாம்: இன்றா நாளையா? - சு. முத்துக்குமார் 01.08.2020 கடந்த ஒரு வாரமாக செய்திகளில் அடிபடுவது அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு பற்றியது. கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு 100 பேரை காவு வாங்கியிருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல எண்ணற்ற விலங்குகளையும் வன உயிரினங்களையும் உடன் அடித்துச் சென்று இருக்கிறது. காசிரங்கா வனவிலங்கு காப்பகத்தின் 90% பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாலைகளில் படுத்து கிடக்கும் காண்டாமிருகத்தை வீடுகளில் தஞ்சம் புகுந்த விலங்குகளையும் நாளிதழ்கள் செய்தியாக வெளியிடுவதைக் காணலாம். வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதிப்புகளோடு கொரோனாவின் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் இருதலைக்கொள்ளி எறும்பாக அசாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறது. அசாமில் வெள்ளம் இப்போதுதான் ஏற்படுகிறதா? இல்லை இது புதிதாக நிகழும் பேரிடரா? ஏன் அசாமிற்கு மட்டும் இவ்வளவு பாதிப்புகள்? தவறு யார் பக்கம் இருக்கிறது? இயற்கையா மனிதனா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களை சற்றுப் பொறுமையாக காண்போம். அசாம் ஒரு அறிமுகம்: இந்திய