Posts

Showing posts from September, 2020

Voice of a Kashmiri

Image
- Khan Tauseef from Srinagar, Presently staying in TamilNadu Before 1947 jammu and kashmir was a princely state and had no connection with india and pakistan which both were under british rule and occupancy, till 1947 we had our own prime minister called sadri riyasat ,now comming on post independence of india and pakistan . On October 27, 1947, Maharaja Hari Singh, the then ruler of Jammu and Kashmir (J&K), signed the dubious instrument of accession with the Indian government allowing Indian forces to land in Srinagar in order to oust Pakistan-backed armed groups who were in a position to oust the Dogra rule from there. But the agreement was once the situation would be inder control indian forces had to leave kashmir but after that india army didn't leave and which results in to the first Indo-Pak war which resulted in the creation of the ceasefire line and occupation of a part of Jammu, Kashmir, and Ladakh by India. Only Gilgit, Baltistan and a small part of J&K came u

அம்பானிகளின் நாடு

நடுவண் அரசு அண்மையில் 3 விவசாய சட்டங்களை இயற்றி இருக்கிறது அல்லது திருத்தி இருக்கிறது. இதற்கு எதிராக நடுவண் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் பெண் அமைச்சர் பதவி விலகி இருக்கிறார். பஞ்சாப் அரியானா மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் முணுமுணுப்புகள் கேட்கின்றன. சரி எதற்காக நடுவணரசு இவ்வளவு அவசரமாக இந்த மூன்று சட்டங்களை கொண்டு வருகிறது என்கிற கேள்வி எழுகிறது? அண்மையில் நடந்த நிகழ்வுகளையும், இந்த சட்டத்தையும் நாம் பொருத்திப் பார்ப்பது காலத்தின் கட்டாயமாகிறது. நடுவண் அரசு ஏறக்குறைய அம்பானி மற்றும் அதானி போன்ற பெருநிறுவனங்களின் கைக்கூலியாகவே மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் கட்சிக்கு நிதி மட்டும் அளிக்கிறார்களா அல்லது அவர்களது கட்சியையே அல்லது அரசாங்கத்தை அவர்கள்தான் நடத்துகிறார்களா என்கிற கேள்விக்கு இன்றைய தேதியில் பதில் யாராலும் சொல்ல இயலும்.  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ஃபியூச்சர் ரீடைல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. இந்நிறுவனம் நாடுமுழுவதும், ஆயிரத்திற்கும்

புரட்டாசி மாதம் அசைவ விலக்கு உண்மை என்ன?

புரட்டாசி மாதம் அசைவ விலக்கு என பலரும் பதிவு போட்டு வருகின்றனர். உண்மை என்ன? தமிழகம் முழுவதும் இதே போல புரட்டாசி மாசம் யாருமே அசைவம் சாப்பிடுவது இல்லையா என்று பார்த்தோமானால் இது உண்மை அல்ல. இந்த பழக்கம் யாரிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலான வட - மேற்கு தமிழக மக்களிடமும், பெருமாளை வணங்கும் வைணவர்களிடம் தான் இருக்கிறது. தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரைக்கு தெற்கே புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை என்பதெல்லாம் கட்டுக்கதை. அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கே செல்லச் செல்ல தமிழினத்தின் கலப்பு இல்லாத உண்மையான பண்பாட்டு கூறுகள் வெளிப்படும். இந்த விஷயத்திலும் அதுதான். தமிழகத்தின் தென்கோடி பகுதிகளில் புரட்டாசி மாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை கணக்கில்.  சரி புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடாமே? உண்மையா? ஏன் புரட்டாசி மாதம் சாப்பிட கூடாத கூடாது என்றால் அதற்கு உடனே இந்த மாதம், வெயில் முடிந்து மழை தொடங்கக் கூடிய காலம். ஆகவே பூமியில் இருந்து வெப்பம் அதிக அளவில் வெளிப்படும். எனவே அசைவம் சாப்பிடுவது உடல் நலத

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை?

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை? நாம் பள்ளிக்கூடங்களில் இந்தியை ஒரு பாடமாக படித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சங்கிகள் சொல்வது போலயே ஒருவேளை நீங்கள் வட இந்தியா வர நேரிட்டால் பள்ளிக்கூடத்தில் படித்த இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு மதிப்பீடு செய்தால் அதிகபட்சம் 10-20 சதவிகிதமே வரும்.  ஏனெனில் நீங்கள் இந்தியில் எழுத போவதோ வாசிக்கப் போவதோ இல்லை. மொழியின் நான்கு கூறுகளில் இரண்டு முதலிலேயே அவுட். அடுத்து வரக்கூடிய பேசுவது மற்றும் கேட்பது ஆகிய இரண்டும் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். இன்றைய தேதியில் வட இந்தியாவிலும், கிராம பகுதிகளை தவிர நகரங்களில் ஆங்கில கலப்பு இந்தியையே பயன்படுத்துகிறார்கள்.  சான்றாக பேருந்து எத்தனை மணிக்கு வரும்? என்பதை Bus ka timing kya hai? என்றால் பதில் சொல்லிவிடுவார்கள். கூட்டி கழித்து பார்த்தால் ஒரு ஐநூறு ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் போதும் நீங்கள் இந்தியில் பேசி வட இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிடலாம். தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தமாக வேலை நிமித்தமாக செல்லக் கூடியவர்கள்

கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள்

Image
கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள் - சு.முத்துக்குமார் 07.09.2020      சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையில் சில வாரங்களுக்கு முன்பு கடலடி கேபிள் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. நாம் எல்லோரும் படித்திருப்போம். சரி உலகமெங்கும் எப்படி இதைச் செய்கிறார்கள் இதன் பயன் என்ன? கடலடி என்றால் எவ்வளவு ஆழத்தில் எப்படி பதிக்கிறார்கள் என்பதை யோசித்திருக்கோமா? இல்லை என்றால் கவலை இல்லை. இப்போது யோசிக்கலாம். வாருங்கள்.     ஒருகாலத்தில் கடலடியில் தகவல்களை பரிமாற்ற உலோக கம்பி வடங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைய தேதியில் முழுவதும் கண்ணாடி ஒளி இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் இதைப் பார்ப்போம். கண்ணாடி ஒளி இழைகள்:       பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம், கண்ணாடி ஒளி இழைகள் தகவல்களை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளி அலைகளின் மூலமாக எடுத்துச் செல்வதற்கு உதவுகின்றன. கண்ணாடி ஒளி இழைகள், ஒளி அலைகளை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்ற காரணத்தினால் தான் இதனது பயன்பாடு அளப்பரியதாக இருக்கிறது. இந்த பேரண்டத்திலேயே வேகம் கூடியது எதுவென நமக்குத் தெரியும், ஒளியைத் தவிர வேறு ஒன்றும் இல்