Posts

Showing posts from August, 2020

ஐரோப்பிய வாகையர் ஆட்ட இறுதிப் போட்டி - சாதனைகள் பல கண்டு‌ பட்டம் பெற்ற பேர்ன் முனிச்!

Image
லிஸ்பன் நகரில் நேற்று நடந்த 2019-20 ஐரோப்பிய வாகையர் ஆட்ட (சாம்பியன்ஸ் லீக்) இறுதி போட்டியில் ஜெர்மனியின் பேர்ன் முனிச் அணி, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. ஆட்ட சுவாரசியங்கள்: பேர்ன் முனிச் அணிக்கான கோலை கிங்ஸ்லே கோமன் அடித்து, அந்த அணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் பெற்றுத் தந்திருக்கிறார். பேர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக வாகையர் பட்டம் சூடுகிறது. 2013க்கு பின் ஏழு ஆண்டுகள் காத்திருந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. பேர்ன் முனிச் அணி தான்‌ இன்று பெற்ற ஆறாவது பட்டத்துடன் வாகையர் ஆட்ட வரலாற்றில் அதிக முறை பட்டம் பெற்ற மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. [முதல் - ரியல் மாட்ரிட் (13முறை), இரண்டு - மிலன் (7முறை)] பேர்ன் முனிச் அணி தான் பெற்ற ஒரு கோல் மூலமாக மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஐரோப்பிய வாகையர் ஆட்ட வரலாற்றில் 500 கோல்கள் அடித்த மூன்றாவது அணியாக இடம்பெற்று விட்டது. பேர்ன் முனிச் அணிக்கு வெற்றி தேடித் தந்த கிங்ஸ்லே கோமன் எதிரணியின் சொந்த களமான பாரிசைச் சேர்ந்தவர் மற்றும் பிஎஸ்ஜி இளையோர் ப

கே.பி.என் தெரியும் நமக்கெல்லாம் வி.பி.என். தெரியுமா?

Image
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் விபிஎன் என்பது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. சரி விபிஎன் என்றால் என்ன? விபிஎன் (மெய்நிகர் தனி வலையமைப்பு) என்பது பொது மற்றும் தனிநபர் நெட்வொர்க் க்கு பாதுகாப்பு மற்றும் ரகசிய காப்பு அளிக்கும் ஒரு இணைப்பு முறையாகும். சான்றாகச் சொல்லவேண்டுமானால் wi-fi ஹாட்ஸ் பாட்டுகள் தனக்கே உரிய விபிஎன் என்னும் இணைப்பை பயன்படுத்தி தகவல்களை பத்திரப்படுத்தி கொள்ளும். அதாவது தங்களிடம் கடவுச்சொல் கேட்ட பின்பு தானே இணைப்பு தரும், அதுதான் அந்த ரகசிய நெட்வொர்க். அண்மைக் காலங்களில் விபிஎன் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், மேலும் அரசுக்கு தெரியாமல் அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க முயற்சிக்கிறார்கள். எப்படி விபிஎன் நமக்கு ரகசிய காப்பு அளிக்கிறது என்றால் நம்முடைய வலைப்பின்னலின் ஐபி முகவரி பதிலாக வேறு ஒரு ஐபி முகவரி மூலமாக இணைய இணைப்பை அளிக்கிறது. விபிஎன் சந்தாதாரர்கள் தங்கள் விருப்பப்படும் ஐபி முகவரியை நிறுவனம் அளித்திருக்கும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சென்னையிலிருந்து இணையதளத்தில

Does TamilNadu really need a Second Capital?

Image
No need for a second capital in Tamil Nadu! Why? Tamil Nadu is one of the leading states in India.  The capital of Tamil Nadu - Chennai, like almost all other states, is located in a corner.  Is that why we need a second capital?  If so, I would say no.  Having dealt with the past without transportation and telecommunications, we need to think about why today.  Corona is changing our lives even more and taking us all the way into the digital world.  Today the demand for a second capital is meaningless.  How many times you had to go to the capital?  Once, twice?  That's it.  If we say for the court, there is already a bench of the High Court in Madurai!  What is the problem then?  If you show your hand to Andhra Pradesh, the situation is different there.  The capital is going to be the third.  They are going to set up a capital for the judiciary, a capital for the administration, a capital where the legislature will be.  You can't do that here!  Secondly, there is no point in bu

தமிழகத்திற்கு ஏன் இரண்டாம் தலைநகரம் தேவையில்லை?

Image
தமிழகத்தில் இரண்டாம் தலைநகரம் ஏன் தேவையில்லை? தமிழகம் - இந்தியாவின் முன்னணி மாநிலங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரும் ஏறக்குறைய மற்ற அனைத்து மாநிலங்களைப் போல ஒரு மூலையிலேயே அமைந்துவிட்டது. அதனாலேயே நமக்கு இரண்டாம் தலைநகரம் வேண்டுமா? என்றால் இல்லை என்பேன் நான். போக்குவரத்து வசதி இல்லாத, தொலைத்தொடர்பு வசதி இல்லாத கடந்த காலத்தையே சமாளித்து வந்திருக்கும் நாம் இன்று ஏன்‌ அதைப்பற்றி யோசிக்க வேண்டும். கொரோனா நம்முடைய வாழ்க்கையை இன்னும் மாற்றி முழுவதும் மின்னணு உலகிற்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்று இரண்டாம் தலைநகரம் என்கிற கோரிக்கை பொருளற்றது. நீங்கள் எத்தனை தலைநகருக்கு செல்ல வேண்டியது இருந்திருக்கிறது? ஒரு முறை, இரு‌ முறை? அவ்வளவு தான். நீதிமன்றத்திற்காக சொன்னோமானால் ஏற்கனவே மதுரையில் உயர்நீதிமன்ற கிளை இருக்கிறதே! அப்புறம் என்ன பிரச்சினை? ஆந்திராவை நீங்கள் கை காட்டினால் அஙகே நிலைமை வேறு. தலைநகரே மூன்றாக அமையப் போகிறது. நீதித்துறைக்கு ஒரு தலைநகர், நிர்வாகத்திற்கு ஒரு தலைநகர், சட்டமன்றம் இருக்கப்போகும் ஒரு தலைநகர் என அமைக்க இருக்கிறார்கள். அப்படி இங்கே முடியாதே! இரண்டாவதாக மதுரையில

Ethiopian highlands and Indian monsoon!

Image
Ethiopian highlands and Indian monsoon! -S.Muthukumar 10.08.2020 The title itself is meaningless, isn't it? What do you think? Is it about tying the knot for the bald head and knee? That’s how I first thought when I read this. Then I found out there is a chance to tie the knot. What I have read, I am sharing you. In India, rainfall is caused by two monsoons. The first is the southwest monsoon, which brings rain to the most parts of India, and the second is the northeast monsoon, which brings rain to Tamil Nadu, Andhra Pradesh and Kerala, located at the southern tip of the Indian peninsula. Of these, the southwest monsoon has the potential to determine India's economy. SWM is so important, not like the northeast monsoon only affects Tamil Nadu on a large scale. Well, let’s leave it that. We'll travel along the southwest monsoon winds. South West Monsoon :     It is also known as the Summer Monsoon of India. Summer monsoon is the name given to the northern hemisphere,

எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்!

Image
எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்! -சு.முத்துக்குமார் 10.08.2020      தலைப்பே ஒரு பொருள் அற்றதாக இருக்கிறது அல்லவா? என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக எழுதி இருக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? அப்படித்தான் இதை பற்றி நான் படித்த பொழுது முதலில் நினைத்தேன். பின்னர் முடிச்சு போடுவதற்கு வாய்ப்பு உள்ளது தெரிந்து கொண்டேன். அதை உங்களுடன் தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.      இந்தியாவில் பருவமழை இரு பருவ காற்றினால் நிகழ்கிறது. முதலாவது இந்தியாவின் ஆகப் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையைக் கொணர்ந்து கொட்டும் தென்மேற்குப் பருவமழை, இரண்டாவது இந்திய தீபகற்பத்தின் தென் கோடி முனையில் அமைந்திருக்கும் தமிழகம் ஆந்திரம் மற்றும் கேரளாவிற்கும் மழையைத் தருவது வடகிழக்கு பருவமழை. இதில் தென்மேற்கு பருவ மழையே இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தை மட்டுமே பெரிய அளவில் பாதிக்கின்ற காரணத்தால் அது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவது இல்லை. சரி அதை விடுவோம், தென்மேற்கு பருவமழைக்கு வருவோம்.  தென்மேற்கு பருவமழை  :     இது இந்தியாவின

லெபனான்: திசை தெரியா பயணம்

Image
லெபனான்: திசை தெரியா பயணம் - சு. முத்துக்குமார் 07.08.2020 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்பார்களே அதற்கு இன்றைய தேதியில் மிகப்பொருத்தமாக லெபனான் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் போதும் போதும் என இன்னல் மேல் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். லெபனான், பன்னெடுங்காலமாகவே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஊனப்பட்டு கிடக்கிறது. இவை இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 70, 80 ஆண்டு காலமாகவே தொடர்ந்து வருகின்றன. விடுதலை பெற்ற பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், உள்நாட்டுப் போர், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை, சிரியா போர் என நீண்டு இருக்கிறது பிரச்சினைகளின் பட்டியல். தற்பொழுது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி லெபனானை சூழ்ந்திக்கிற நிலையில், கொரோனாவும் பெய்ரூட்டில் நிகழ்ந்த பெருவெடிப்பும் வெந்த புண்ணில் வெகு ஆழமாக வேலைப் பாய்ச்சி விட்டுவிட்டன. இதிலிருந்து லெபனான் மீளுமா? என்பது மில்லியன் அல்ல பில்லியன் டாலர் கேள்வியே! இந்தக் கட்டுரை லெபனானிற்குள்ளே தங்களை அழைத்துச் செல்லவிருக்கிறது.  லெபனான் - மத்திய கிழக்கு ஆசியாவில், அரபு நாடுகளின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் சிரியாவிற்கும் நடுவில் அ

மூழ்கும் அசாம்: இன்றா நாளையா?

Image
மூழ்கும் அசாம்: இன்றா நாளையா? - சு. முத்துக்குமார் 01.08.2020 கடந்த ஒரு வாரமாக செய்திகளில் அடிபடுவது அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு பற்றியது. கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு 100 பேரை காவு வாங்கியிருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல எண்ணற்ற விலங்குகளையும் வன உயிரினங்களையும் உடன் அடித்துச் சென்று இருக்கிறது. காசிரங்கா வனவிலங்கு காப்பகத்தின் 90% பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாலைகளில் படுத்து கிடக்கும் காண்டாமிருகத்தை வீடுகளில் தஞ்சம் புகுந்த விலங்குகளையும் நாளிதழ்கள் செய்தியாக வெளியிடுவதைக் காணலாம். வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதிப்புகளோடு கொரோனாவின் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் இருதலைக்கொள்ளி எறும்பாக அசாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.  அசாமில் வெள்ளம் இப்போதுதான் ஏற்படுகிறதா? இல்லை இது புதிதாக நிகழும் பேரிடரா? ஏன் அசாமிற்கு மட்டும் இவ்வளவு பாதிப்புகள்? தவறு யார் பக்கம் இருக்கிறது? இயற்கையா மனிதனா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களை சற்றுப் பொறுமையாக காண்போம். அசாம் ஒரு அறிமுகம்: இந்திய