இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை?
இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை? நாம் பள்ளிக்கூடங்களில் இந்தியை ஒரு பாடமாக படித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சங்கிகள் சொல்வது போலயே ஒருவேளை நீங்கள் வட இந்தியா வர நேரிட்டால் பள்ளிக்கூடத்தில் படித்த இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு மதிப்பீடு செய்தால் அதிகபட்சம் 10-20 சதவிகிதமே வரும். ஏனெனில் நீங்கள் இந்தியில் எழுத போவதோ வாசிக்கப் போவதோ இல்லை. மொழியின் நான்கு கூறுகளில் இரண்டு முதலிலேயே அவுட். அடுத்து வரக்கூடிய பேசுவது மற்றும் கேட்பது ஆகிய இரண்டும் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். இன்றைய தேதியில் வட இந்தியாவிலும், கிராம பகுதிகளை தவிர நகரங்களில் ஆங்கில கலப்பு இந்தியையே பயன்படுத்துகிறார்கள். சான்றாக பேருந்து எத்தனை மணிக்கு வரும்? என்பதை Bus ka timing kya hai? என்றால் பதில் சொல்லிவிடுவார்கள். கூட்டி கழித்து பார்த்தால் ஒரு ஐநூறு ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் போதும் நீங்கள் இந்தியில் பேசி வட இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிடலாம். தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தமாக வேலை நிமித்தமாக செல்லக் கூடியவர்கள்