Posts

Ethiopian highlands and Indian monsoon!

Image
Ethiopian highlands and Indian monsoon! -S.Muthukumar 10.08.2020 The title itself is meaningless, isn't it? What do you think? Is it about tying the knot for the bald head and knee? That’s how I first thought when I read this. Then I found out there is a chance to tie the knot. What I have read, I am sharing you. In India, rainfall is caused by two monsoons. The first is the southwest monsoon, which brings rain to the most parts of India, and the second is the northeast monsoon, which brings rain to Tamil Nadu, Andhra Pradesh and Kerala, located at the southern tip of the Indian peninsula. Of these, the southwest monsoon has the potential to determine India's economy. SWM is so important, not like the northeast monsoon only affects Tamil Nadu on a large scale. Well, let’s leave it that. We'll travel along the southwest monsoon winds. South West Monsoon :     It is also known as the Summer Monsoon of India. Summer monsoon is the name given to the northern hemisphere,

எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்!

Image
எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்! -சு.முத்துக்குமார் 10.08.2020      தலைப்பே ஒரு பொருள் அற்றதாக இருக்கிறது அல்லவா? என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக எழுதி இருக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? அப்படித்தான் இதை பற்றி நான் படித்த பொழுது முதலில் நினைத்தேன். பின்னர் முடிச்சு போடுவதற்கு வாய்ப்பு உள்ளது தெரிந்து கொண்டேன். அதை உங்களுடன் தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.      இந்தியாவில் பருவமழை இரு பருவ காற்றினால் நிகழ்கிறது. முதலாவது இந்தியாவின் ஆகப் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையைக் கொணர்ந்து கொட்டும் தென்மேற்குப் பருவமழை, இரண்டாவது இந்திய தீபகற்பத்தின் தென் கோடி முனையில் அமைந்திருக்கும் தமிழகம் ஆந்திரம் மற்றும் கேரளாவிற்கும் மழையைத் தருவது வடகிழக்கு பருவமழை. இதில் தென்மேற்கு பருவ மழையே இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தை மட்டுமே பெரிய அளவில் பாதிக்கின்ற காரணத்தால் அது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவது இல்லை. சரி அதை விடுவோம், தென்மேற்கு பருவமழைக்கு வருவோம்.  தென்மேற்கு பருவமழை  :     இது இந்தியாவின

லெபனான்: திசை தெரியா பயணம்

Image
லெபனான்: திசை தெரியா பயணம் - சு. முத்துக்குமார் 07.08.2020 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்பார்களே அதற்கு இன்றைய தேதியில் மிகப்பொருத்தமாக லெபனான் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் போதும் போதும் என இன்னல் மேல் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். லெபனான், பன்னெடுங்காலமாகவே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஊனப்பட்டு கிடக்கிறது. இவை இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 70, 80 ஆண்டு காலமாகவே தொடர்ந்து வருகின்றன. விடுதலை பெற்ற பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், உள்நாட்டுப் போர், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை, சிரியா போர் என நீண்டு இருக்கிறது பிரச்சினைகளின் பட்டியல். தற்பொழுது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி லெபனானை சூழ்ந்திக்கிற நிலையில், கொரோனாவும் பெய்ரூட்டில் நிகழ்ந்த பெருவெடிப்பும் வெந்த புண்ணில் வெகு ஆழமாக வேலைப் பாய்ச்சி விட்டுவிட்டன. இதிலிருந்து லெபனான் மீளுமா? என்பது மில்லியன் அல்ல பில்லியன் டாலர் கேள்வியே! இந்தக் கட்டுரை லெபனானிற்குள்ளே தங்களை அழைத்துச் செல்லவிருக்கிறது.  லெபனான் - மத்திய கிழக்கு ஆசியாவில், அரபு நாடுகளின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் சிரியாவிற்கும் நடுவில் அ

மூழ்கும் அசாம்: இன்றா நாளையா?

Image
மூழ்கும் அசாம்: இன்றா நாளையா? - சு. முத்துக்குமார் 01.08.2020 கடந்த ஒரு வாரமாக செய்திகளில் அடிபடுவது அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு பற்றியது. கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு 100 பேரை காவு வாங்கியிருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல எண்ணற்ற விலங்குகளையும் வன உயிரினங்களையும் உடன் அடித்துச் சென்று இருக்கிறது. காசிரங்கா வனவிலங்கு காப்பகத்தின் 90% பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாலைகளில் படுத்து கிடக்கும் காண்டாமிருகத்தை வீடுகளில் தஞ்சம் புகுந்த விலங்குகளையும் நாளிதழ்கள் செய்தியாக வெளியிடுவதைக் காணலாம். வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதிப்புகளோடு கொரோனாவின் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் இருதலைக்கொள்ளி எறும்பாக அசாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.  அசாமில் வெள்ளம் இப்போதுதான் ஏற்படுகிறதா? இல்லை இது புதிதாக நிகழும் பேரிடரா? ஏன் அசாமிற்கு மட்டும் இவ்வளவு பாதிப்புகள்? தவறு யார் பக்கம் இருக்கிறது? இயற்கையா மனிதனா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களை சற்றுப் பொறுமையாக காண்போம். அசாம் ஒரு அறிமுகம்: இந்திய

முருகன் அசைவக் கடவுளா?

Image
சில மாதங்களுக்கு முன்பு சுகிசிவம் அவர்கள் ஒரு காணொளி பதிவிட்டதினால் ஒரு சர்ச்சை கிளம்பியது. முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறா என்பது அதனுடைய தலைப்பு. நாம் அங்கே சுற்றி இங்கே என்று மீண்டும் அதே புள்ளியில் வந்து தான் இருக்கிறோம். தமிழர்கள் வழிபட்ட முருகனும் இன்றைய சுப்பிரமணியனும் வேறு வேறா? முருகர் அசைவ கடவுளா? எனக் கேட்டால் நான் சொல்லி விடுவேன் ஆம் என்று. ஆதாரம் கேட்பார்கள், எதிர்க் கேள்வி கேட்பவர்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு. பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் சொல்வார்கள், பல தெய்வங்கள் பிறந்திருக்கின்றன, பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன. அதாவது ஒரு காலகட்டத்தில் ஒரு தெய்வ வழிபாடு மேலோங்கி நின்று பின்பு அறவே இல்லாது போகும். தமிழகத்தில் ஒரு காலத்தில் வழிபடப்பட்ட மூதேவி எனப்படும் மூத்த தேவி தற்காலத்தில் யாராலும் தொழப்படுவது இல்லை. அந்த தெய்வம் இறந்துவிட்டது. இன்று பல தெய்வங்கள் புதுப்பிறவி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. சான்றாக சாய்பாபாவைச் சொல்லலாம். புற்றீசல் போல பெருகிக் கொண்டே வருகிறார். நாம் முருகருக்கு வருவோம். சாய்பாபாவை அப்புறம் பார்ப்போம். தமிழின் மிகத் தொன்மையான நூலாக கருதப்படு

குருக் மொழி - தமிழின் தங்கை

Image
சில நாட்களுக்கு முன்னர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமிழா? தமிழ் போன்ற மொழியா? இந்தக் கேள்விக்கான பதில் இன்று இதோ. நம் எல்லோருக்கும் தெரியும் இந்தியாவிலேயே இரு முக்கிய மொழிக்குடும்பங்கள் இருக்கின்றன. ஒன்று திராவிட மொழி குடும்பம் மற்றொன்று இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்.  தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாக இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் வெறும் தென்னிந்தியாவில் மட்டும் அல்லாது மத்திய இந்தியாவிலும் மற்றும் வட இந்தியாவிலும் பேசப்படுகின்றன. எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்தாலும் அந்த மொழிகள் சொல்லத் தக்கவையே! திராவிட மொழிக் குடும்பத்தில் வட பிரிவில் இருப்பது பிராகுயி, மால்தோ, குருக் போன்ற மொழிகள் தான்.  இதிலே பிராகுயி மொழி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல உள்ள மால்தோ மொழி மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜ்மஹால் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களால் பேசப்படுகிறது. குருக் மொழி கடைசியாக வருகிறது. குருக் மொழி: நான் கேட்ட கேள்விக்கான பதில் இந்த குரூக் மொழிதான். எங்கள் ஆலையில் வேலை பார

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

Image
தொடர்ந்து அரசியல் பதிவுகளாக இருந்து வரும் சூழ்நிலையில் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வானவியலைப் பார்ப்போம். வகைவகையான மேகங்கள்: உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகை மேகங்கள் இருப்பதாக சொல்கிறது. அவற்றை சுருக்கி ஒரு பத்து வகைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றைப் பற்றி விரிவாக காண்போம். 1. தாழ்நிலை மேகங்கள் (குமுலஸ், இசுறேடஸ், இசுறேடோகுமுலஸ்) இவை கடல்மட்டத்திலிருந்து 6500 அடிக்கு உள்ளாக இருப்பவை. 2. நடுநிலை மேகங்கள் (அல்டோகுமுலஸ், நிம்போஸ்றேடஸ், அல்டோஸ்றேடஸ்) இவை கடல் மட்டத்திலிருந்து 6500 அடி முதல் 20,000 அடிக்கு உள்ளாக உருவாகும் மேகங்கள். 3. உயர் நிலை மேகங்கள் (சிர்ரஸ், சிர்ரோகுமுலஸ், சிர்ரோஸ்றேடஸ்) இவை கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடிக்கு மேலான உயரத்தில் இருக்கும் மேகங்கள். 4. திரள் மேகங்கள் பெயருக்கேற்றார் போலவே திரள் மேகங்கள், வளிமண்டல கீழ் அடுக்கில் இருந்து கிளம்பி வளிமண்டல மேல் மேலடுக்கு வரை உயர்ந்து காணப்படுபவை. [ இந்த மேகங்களின் பெயர்கள் தமிழாக்கம் இன்னும் செய்யப்படவில்லை. நீங்கள் முடிந்தால் தமிழாக்கம் செய்து சொல்லுங்கள்.] நம்