தேங்காய் பறிக்கும் குரங்குகள்
குரங்குகள் தென்னை மரமேறி தேங்காய் பறித்துப் போடுகிறது! குரங்குகளுக்கான பள்ளி ஒன்று இயங்குகிறது! நம்ப முடியவில்லையா? ஒரு உயிரினம் திறமையாக இருக்குமெனில் அதை பல்வகைப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? மாடு வண்டி இழுக்கிறது, நிலம் உழுகிறது! குரங்கு தேங்காய் பறித்தால்?! கேட்க ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா நானும் முதலில் அப்படித்தான் இதைக் கேள்விப்பட்டேன். திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி நூலை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அதிலே பன்றி வால் குரங்குகளைப் பற்றியும் அவற்றை மலாயாவில் தென்னை மரமேறி தேங்காய் பறிக்க பயன்படுத்துவதைப் பற்றியும் எழுதியிருந்தார். வினோதமாக இருந்தது. இதைப்பற்றி மேலும் தேடிய பொழுது வித்தியாசமான செய்திகளும் கிடைத்தன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் குரங்குகளை பல செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் தென்னை மரமேறி தேங்காய் பறிப்பது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி குரங்குகள் தேங்காய் பறித்து போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேங்காய் பறிப்புக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பன்றி